நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்!
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்படி இருக்கையில், நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு ரூ.20 கோடி விஜய் கடன் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மருத்துவ மாணவி அனிதா, நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டத்தை நடத்தி, மருத்துவ சீட் கிடைக்காததால் உயிரை விட்டிருந்தார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அனிதாவின் மரணத்தில் உடைந்து போயிருந்த அவரது பெற்றோரை சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இது விஜய் மீதான மதிப்பை அதிகரிக்க செய்திருந்தது.

ஆனால், நீட் கோச்சிங் கொடுக்கும் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.20 கோடி விஜய் கடனாக கொடுத்திருப்பதாக, தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதாவது விஜய் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து குறித்து சொல்லியிருந்தபோது, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இப்படி இருந்துக்கொண்டே, மறுபுறம் நீட் தேர்வுக்கு கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு எதற்காக ரூ.20 கோடி கடன் கொடுக்க வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்னறனர்.
அப்படியெனில், நீட் தேர்வை விஜய் மறைமுகமாக ஆதரிக்கிறாரா? அல்லது சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்சி நீட் கோச்சிங் பெற வேண்டும் என்று விஜய் விரும்புகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. அப்புறம் எதுங்குங்க அனிதா மரணத்திற்கு விஜய் கண் கலங்கினாரு? என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
இது மட்டுமல்லாது, அவரது பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற தகவல்களும் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன. திரைப்படங்களுக்கு ரூ.200 கோடி வரை விஜய் வருமாணம் ஈட்டியதாக நிர்வாகிகள் கூறியிருந்தனர். ஆனால், விஜய் தனது மொத்த சொத்து மதிப்பை ரூ.400 என்று கணக்கு காட்டியிருக்கிறார். அப்படியெனில், கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு வந்த விஜய் என்று சொல்வது பொய்யா? அல்லது பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மைக்கு முரணாணவையா? என்று கேள்விகள் எழுகின்றன.












Click it and Unblock the Notifications