சோழிங்கநல்லூர் டூ செங்கல்பட்டு ரோடு.. காஞ்சிபுரத்தில் நாலாபக்கமும் பறந்த ஆபீசர்ஸ்..தமிழக அரசு அதிரடி
சென்னை: விரைவில் வடகிழக்கு பருவமழை கொட்ட போகிறது.. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது கையில் எடுத்துவிட்டது. இது தொடர்பான முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், தடுப்பரண் அமைத்தல், மின்சார கம்பங்கள் மற்றும் குடிநீர்க் குழாய்களை மாற்றியமைத்தல் குறித்த ஆய்வுகளும் நடந்துள்ளன.. அதேபோல, மாநகராட்சி பணிகளும் இப்போதே கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

பருவமழை: அதுமட்டுமல்ல, நிறைய மாவட்டங்களில் இப்போதே குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும். அதனால்தான், நெடுஞ்சாலைத்துறையின் வெள்ளத்தடுப்புப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அதிரடி ஆய்வுகளை சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்டிருந்தார்.
குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாநகர சாலைகள், திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணிகள், சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, பருவமழை முன்னெச்சரிக்கை போன்றவை குறித்து இந்த ஆய்வினை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.
அப்போது, வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல வேண்டிய பணிகளை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்தாரர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும், கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணி, மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர்குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை விரைந்து முடிக்க வேண்டும், என அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..
ஈசிஆர்: அதேபோல, ஈசிஆர் சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர் குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை தனி கவனம் செலுத்தி முடிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு, காலக்கெடு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் - (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபால பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபால பணிகள், ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் - குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்றார்.
எதிர்பார்ப்பு: அதைவிட முக்கியமாக, மேற்கண்ட பணிகளையெல்லாம், செப்டம்பர் 30-க்குள் அதாவது இன்றைய தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, சென்னையின் பிரதான இடங்களில் பெரும்பாலான பணிகள் துரிதமாக நடந்துள்ளன.. இதையடுத்து, ஓரிரு நாளில் அமைச்சர், விரைந்து செய்யப்பட்ட பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications