விபரீதம்.. ஸ்தம்பித்து விடும்.. ஓபிஎஸ்ஸுடன் இணைய வேண்டுமா? கோர்டில் எடப்பாடி தரப்பு பரபர பதில்!
Should i join hands with O Panneerselvam? Edappadi Palanisamy answers in MHC. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு வழக்கை விசாரணை செய்து வருகிறது. இதனால் இன்றே இரண்டு தரப்பும் இறுதி வாதங்களை வைக்கும். இரண்டு தரப்பிற்கும் தலா 1 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில், தனி நீதிபதி தீர்ப்பால் அதிமுக முடங்கி உள்ளது. கட்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. கட்சி செயல்பாடுகள் இந்த தீர்ப்பு காரணமாக முடங்கி உள்ளது. பொதுக்குழுவை பின்பற்ற வேண்டும். பொதுக்குழு முடிவுதான் அதிமுகவில் முக்கியம். பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டுதான் அடிப்படை உறுப்பினர்கள் செயல்பட முடியும். ஆனால் தனி நீதிபதியோ அடிப்படை உறுப்பினர்களை கேட்டு முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறி உள்ளார்.

தனி நீதிபதி
இந்த வாதத்திற்காகவே தனி நீதிபதியின் தீர்ப்பு தவறு என்று உத்தரவிடலாம். கட்சி விதிகளின்படி பொதுக்குழு மட்டுமே முடிவுகளை எடுக்க முடியும். எனவே நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க முடியாது. அவர்களுக்கான அதிகாரம் எதுவும் இல்லை. அதை பற்றி கட்சி விதிகளில் எதுவும் இல்லை. பொதுக்குழு மட்டுமே முடிவு எடுக்க முடியும்.

பொதுக்குழு
பொதுக்குழுவிற்கு ஏன் அடிப்படை உறுப்பினர்களை அழைக்கவில்லை என்று கேட்டுள்ளார். அப்படி அடிப்படை உறுப்பினர்களை அழைக்க வேண்டும் என்று கட்சி விதி சொல்லவில்லை. அதோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதி கூறி இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் உடன் நாங்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்பே இல்லை. அது கட்சி நடவடிக்கைகளை பாதிக்கும்.

இணைய மாட்டோம்
நாங்கள் இணைய மாட்டோம். அப்படி நடந்தால் கட்சியே ஸ்தம்பித்துவிடும். இதன் காரணமாக கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதியின் தீர்ப்பே விபரீதமான முடிவு. அதனால் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்து. இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூறி உள்ளது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கடந்த முறை தனி நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications