சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. நமக்கு நல்ல காலம்.. ஏய் சிரிக்காதே.. சிரிக்காதே.. சிட்சுவேஷன் சாங்!
சென்னை: ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பு என்றவுடன் சிங்கம் ஒன்று புறப்பட்டதே, நமக்கு நல்ல காலம் பொறந்திருக்கு நேரம் என்ற பாட்டுதான் நினைவுக்கு வந்தது.
Recommended Video
ரஜினிகாந்த் எப்போது கட்சித் தொடங்குவார் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இன்றைய நிலையில் இன்று சென்னை அடையாறு ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு என ரஜினி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரஜினியின் வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அரசியல் பிரவேசத்தை அறிவிக்கும் (!) ரஜினியை வழி அனுப்ப கூடியிருந்தனர். ராகேவேந்திரா அவென்யூவிலிருந்து ரஜினியின் கார் வந்தவுடன் ரசிகர்கள் பூக்களை தூவினர்.
🤭🤘🏻 pic.twitter.com/BJb9WQHLPI
— Sonia Arunkumar (@rajakumaari) March 12, 2020
வழிநெடுகிலும் தலைவா, வருங்கால முதல்வர் என கோஷங்களை எழுப்பினர். அப்போது ரசிகர்களுக்கு மனதில் ஓடிய பாடல் அருணாசலம் படத்தில் வரும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பிறந்திருச்சி நேரம் என தொடங்கும் பாடல். அந்த படத்திலும் ரஜினி அரசியலில் நிற்கும் தன் கட்சியினரை ஆதரித்து பேச போகும் போது இடம்பெற்றதாகும்.
ஆனால் ரஜினியின் பேச்சை கேட்டவுடன் அவர் தற்போது அரசியலுக்கு வரும் சூழல் இல்லை என்பதையே அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதே நிலையில் மற்ற அரசியல் கட்சியினரும் மற்ற நடிகர்களின் நடிகர்களும் இந்த பாட்டை கேட்டு கேட்டு சிரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications