ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பிரத்யேகமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. இதன் தொடக்க விழா நாளை நடைபெற இருந்த நிலையில் தற்போது இந்த விழா ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, ஆட்சியாளர்களுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையில் சிங்கப்பெண் அதிரடிப்படைப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது.

இவர்களின் வேலை பள்ளி, கல்லூரிகள், ஐடி பார்க்குகள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர்களை உரிய ஆதாரங்களுடன் கைது செய்யும் வகையில், நவீன கருவிகள் பொருத்திக்கொள்ள வசதியாக இவர்களின் யூனிபார்ம் டிசைன் செய்யப்பட்டிருந்தது.
தமிழக காவல்துறையில் காக்கி நிறத்தில் பேண்ட், சட்டைதான் யூனிபார்மாக கொடுக்கப்படும். ஆனால், சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு நீல சிற சட்டடையும், காக்கி நிற பேண்ட்டும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் தொடக்க விழா ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை நடக்க இருந்தது. முதலமைச்சர் விஜய் இதனை தொடங்கி வைக்க இருந்தார். எனவே தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திட்டம், தொடக்கத்திலேயே சறுக்கியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக அரசு இந்த திட்டத்தை முழு முயற்சியோடு, எவ்வளவு இடையூறுகள் வந்திருந்தாலும் தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீரியஸான பிரச்சனையாக வெடித்திருக்கிறது.
இதை சரி செய்ய, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிறுத்த, சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் சரியான ஒன்று. ஆனால், அதை தொடங்குவதிலேயே இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்க கூடாது என்று பலரும் பேச தொடங்கியிருக்கின்றனர்.
-
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்












Click it and Unblock the Notifications