Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீரில் காசா .. இனப்படுகொலையை இஸ்ரேல் நிறுத்தனும்! பாலஸ்தீன் கொடியுடன் சென்னை பல்கலை மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலஸ்தீனின் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி மக்களை கொன்று குவித்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழகத்தில் SIO மாணவர் பதாகைகளை ஏந்தினர்.

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பல கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஸாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர வலியுறுத்தியும், பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்தும் சென்னைப் பல்கலைக்கழகம் சேப்பாக்கம் வளாகத்தில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றது.

SIO students at Madras University demanding to stop Israels genocide in Gaza

இந்தக் கூட்டத்தில், SIO மாநில பொதுச் செயலாளர் ஃபாயிஸ், மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா ஆகியோர் உரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசுகையில், "கடந்த அக்டோபர் 7ஆம் தேதியிலிருந்து பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதுவரை அங்கே சுமார் 27,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பாதி பேர் சிறுவர்களும் பெண்களும்தான் என்பது இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

SIO students at Madras University demanding to stop Israels genocide in Gaza

பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலை உலக நாடுகள் கண்டித்தும் இஸ்ரேல் தன் அராஜகத்தை நிறுத்துவதாக இல்லை. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுத்தளங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தகர்த்து வருவதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக, காஸாவில் உள்ள கல்வி வளாகங்களில் இஸ்ரேலின் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டு, மாணவர்கள் கல்வி கற்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

SIO students at Madras University demanding to stop Israels genocide in Gaza

ரஃபாத் அல்அறீர் என்ற பேராசிரியர் கொல்லப்பட்டது இங்கு நினைவூட்டப்பட வேண்டியது. அவர் வெறும் கல்வியாளர் மட்டுமல்ல, பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு மாபெரும் பங்களிப்பைச் செய்தவர். அவர் காஸா பகுதியைச் சேர்ந்த ஒரு முக்கியமான எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளரும்கூட. சமீபத்தில் அவரை இலக்கு வைத்துக் கொன்று உள்ளது இஸ்ரேல். இப்படியான அட்டூழியம் கடும் கண்டனத்துக்குரியது"

தொடர்ந்து உரையாற்றிய SIO மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா, "பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வருவது வெறும் தாக்குதல் அல்ல; இனப்படுகொலை. ஈவிரக்கமின்றி இஸ்ரேலிய ஆக்கிமிப்புப் படை செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய ராணுவ பலம் கொண்ட ஒரு நாட்டை பாலஸ்தீனர்கள் தன் நெஞ்சுரத்தால் எதிர்கொண்டு வருகின்றனர். இத்தனை காலம் போர் நீடிப்பதும், மக்களைக் கொல்வதைத் தவிர வேறெந்த பலனையும் இஸ்ரேல் ஈட்டாததும் அந்நாட்டுக்கு அவமானகரமான ஒன்று.

இன்றைக்கு உலக அரங்கில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மிகச் சில வளர்ந்த நாடுகள் மட்டுமே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடி உலகளவில் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழல் பாலஸ்தீனர்களுக்குக் கிடைத்த வெற்றி" என்று கூறினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வில் மாணவர்கள் கலந்துகொண்டு, இஸ்ரேலுக்கு எதிராகத் தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர். பதாகைகள் வைத்து போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+