2002ல் நடந்த SIR.. தமிழ்நாட்டில் 50 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!
சென்னை: தமிழ்நாட்டில் 2002 முதல் 2005 வரை நடத்தப்பட்ட வாக்காளர் திருத்தத்தில் சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் சுமார் 27 லட்சம் பேர் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறிய தராசு ஷ்யாம், இனி அரசியல் கட்சிகள் வரைவு வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை தமிழ்நாட்டில் SIR பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் SIR பணிகள் நிறைவடைந்து சூழலில் தேர்தல் ஆணையம் தரப்பில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக குறைந்துள்ளது. மொத்தமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், முன்னதாக 2002 முதல் 2005 வரை SIR பணிகள் நடத்தப்பட்டது. அப்போது சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு முக்கியமான காரணம் இறந்தவர்கள் பட்டியல் தான். தற்போதைய SIRலும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் கால் பகுதியாக இருக்கிறது.
வழக்கமாக இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்குவதே இல்லை. சாதாரணமாக ஒரு தொகுதியில் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 2004ல் இருந்து கணக்கிட்டால் 10 லட்சம் பேர் வருவார்கள். அதேபோல் இரட்டை வாக்குகள் வைத்திருப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பலரும் சொந்த ஊரில் வாக்குரிமை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
அவர்களை கண்டறிவதுதான் சிரமம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றன. அதனால் இதற்கு திமுக காரணம் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் படிவங்கள் பெற்றப்பட்ட 99 சதவிகிதம் பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தமிழ்நாட்டில் இறந்தவர்கள் பட்டியலில் உள்ள 26.94 லட்சம் நீக்கப்பட்டுள்ளனர்.
அதனால் இடம்பெயர்ந்தோர் பட்டியலில் மட்டுமே பிரச்சனை இருக்கிறது. இனி அதனை சரி செய்வார்கள். சொந்த ஊரில் வாக்குரிமை வைத்திருப்பவர்கள் பலரும் சென்னை, கோவை, மதுரையில் வேலை பார்ப்பார்கள். பிஎல்ஓ-க்களில் படிவங்களை கைப்பற்றி மீணும் சமர்ப்பித்து மிகவும் சுறுசுறுப்பாக இருந்த கட்சி என்றால் திமுக தான். காங்கிரஸ், பாஜக மட்டுமே சுறுசுறுப்பாக இல்லை.
வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதே அரசியலில் முதல் பணி. வரைவு வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்வோம். இது வழக்கமாக செய்யும் விஷயம் தான். SIR முறையில் இனி நாம் தங்கி இருக்கும் இடத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்குதான் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் மக்கள் எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications