முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.03 லட்சம் வாக்குகள் நீக்கம்!
சென்னை: SIR பணிகளுக்கு பின் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் சுமார் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் SIR பணிகளைத் தேர்தல் ஆணையம் நடத்தியது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. 40 நாட்கள் நடந்த பணிகளின் போது திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பிஎல்ஓ-க்களுக்கு உதவியாக படிவங்களை பூர்த்தி செய்து சமர்த்தனர். அதில் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது.

இதற்கிடையே இப்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு முன்பாக சென்னையில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்குகள் இருந்தன. தற்போது SIR பணிகளுக்கு பின் 25 லட்சத்து 79 ஆயிரத்து 676 வாக்குகளாக இருக்கிறது.
சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,56,555ஆகவும், தொடர்பு கொள்ள முடியாதோர் 27,328ஆகவும், இடம் மாறியோர் 12,22,164 ஆகவும், இரட்டைப் பதிவாக 18,772 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் 35.58 சதவிகித வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 16 தொகுதிகளிலும் அதிக அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 841 வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்கள் 90,098 பேரும், பெண் வாக்காளர்கள் 96,709 பேரும், 3ஆம் பாலினத்தவர் 34 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் இருந்து 1.03 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications