கோடநாடு எஸ்டேட் விவகாரம்.. பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு நீதி விசாரணை: திருநாவுக்கரசர் பேட்டி
Recommended Video

சென்னை: அகில இந்திய தேசிய மகிளா காங்கிரஸ் செயலாளர் அப்சரா ரெட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது: அப்சரா ரெட்டியை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அப்சரா நிச்சயம் துணை நிற்பார்.

திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே அனைவரின் விருப்பத்தை கேட்டு அறிந்து தேதியை அறிவிதிருக்க வேண்டும். இத்தகைய செயல் தேர்தல் கமிஷன் மீதுள்ள நம்பிக்கையை சிதைக்கும் விதமாக இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தலுக்காக புதிய கமிட்டி அமைக்கப் பட்டு வருகிறது, நாளை காலை முன்னாள் மாநில தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள், அனைவருடனான ஆலோசனை கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது.
மக்களை மோடி ஏமாற்றி இருக்கிறார். தமிழ்நாட்டில் கதவு திறந்து உள்ளது கூட்டணிக்கு எல்லோரும் வாருங்கள் என்று அறிக்கை விடுத்துள்ளார். காங்கிரசுடன் அனைத்து கட்சிகளும் கூட்டணி சேர்வது அமித்ஷாவிற்கு பொறுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதால் கடைசி நேர புலம்பல் இது.
திமுக தலைவர் தெளிவாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்துவிட்டனர். அதிமுக அச்சுறுத்தலில் இருக்கிறது, தம்பிதுரை போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்று பயம் கொள்கிறார்கள். காங்கிரஸ்-திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வழக்கில், அமர்வு நீதிபதியை கொண்டு நீதி விசாரணை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications