டெல்டா பகுதி உட்பட 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications