Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 6 பேர் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் திமுகவின் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம், காங். ப.சிதம்பரம், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. வேட்புமனுக்களைதிரும்பப் பெற இன்று கடைசி நாள்.

Six Rajyasabha MPs From Tamil Nadu Elected Without Competition

தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 15-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். இன்று மாலையுடன் இதற்கான நேரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகின. இந்த 6 இடங்களில் திமுக 3; காங்கிரஸ் 1; அதிமுக 2 இடங்களில் போட்டியிட முடிவுசெய்தது. இதனையடுத்து இந்த 6 இடங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று மாலையுடன் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் அவகாசம் நிறைவடைந்தது. தற்போதைய நிலையில் பிரதான கட்சிகளின் 6 வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

இதான் திமுகவின் திமுகவின் கிரிராஜன், ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+