காத்திருப்போர் பட்டியலுக்கு போன காவலர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சென்னை போலீஸ் கமிஷ்னர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக இருந்த புகாரில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 போலீசார் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கஞ்சா, குட்கா, மாவா உட்பட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த உத்தரவை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம் மூலம் அறிவுறுத்தி இருந்தார்.

Slowness in drug eradication: 26 cops transferred from Chennai to outlying districts

இதன்படியே சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் , சென்னையில் போதை, புகையிலை பொருட்களின் புழக்கத்தை தடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக செயல்பட்டதாகவும்,குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் பல்வேறு காவலர்கள் மீது புகார் எழுந்தது.'

இதையடுத்து போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனமாக செயல்பட்டாலோஇ குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாலோ கண்டிப்பாக காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

எச்சரித்ததுடன் மட்டுமின்றி நடவடிக்கையிலும் சந்தீப்ராய் ரத்தோர் இறங்கினார். சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படியே,. 9 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இதர போலீசார் 36 பேர் என மொத்தம் 65 பேர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. அவர்கள் சென்னை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் 3 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படுவதற்காக டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களில் 7 சப்-இன்ஸ்பெக்டர்களும், 16 போலீசாரும் நேற்று வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என தகவல்கள் வெளியாகின

இதற்கிடையில் புகாரில் சிக்கிய சென்னை உளவுப்பிரிவில் பணியாற்றிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 போலீசாரும் நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆவடி கமிஷனரகத்தில் இதுபோல் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலில் அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 போலீஸார் ராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர். இதனால் மெத்தனமாக இருந்தாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற போலீஸார் கலக்கத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+