ஆஹா... சசிகலா கையில்... "அந்த" லெட்டர்.. வெலவெலக்கும் அமைச்சர்கள்.. என்னாகுமோ!

சிறையில் இருந்த சசிகலாவுக்கு அமைச்சர்கள் சிலர் கடிதம் எழுதினார்களாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா வருகையால் அதிமுக தரப்பில் ஒரு சிலர் பூரிப்பில் இருக்கிறார்கள் என்றால், வேறு சிலர் கலக்கத்தில் உள்ளார்களாம்.. அப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.

ஜெயலலிதா இருந்தபோதே, அதிமுகவின் அசைக்க முடியாத லாபியாக இருந்தார் சசிகலா.. அதனால் எம்எல்ஏ, அமைச்சர்கள் முதல், ஒன்றிய செயலாளர்கள் வரை சசிகலாவுக்கு அத்துப்படி.. கட்சியின் பிரச்சனைகள் அத்தனையையும் திரைமறைவில் கையாண்டு தீர்வுகளையும் சொன்னவர் சசிகலா.

Sources say that, Ministers wrote Letter to Sasikala

திடீரென அவர் ஜெயிலுக்கு போய்விடவும், அவரது ஆதரவாளர்கள் கடுமையான அப்செட் ஆனார்கள்.. அதிலும் அமைச்சர்களாக இருக்கும் சிலர், சசிகலாவின் ஆலோசனை இன்றி, தத்தளித்தனர்.. கட்சிக்குள் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகள், பூசல்களுக்கு சரியான தீர்வும் இன்றியும் தவித்தனர்.

அந்த வகையில், சசிகலா சிறையில் இருந்தபோது, அவருக்கு சில அமைச்சர்களும், எம்பிக்களும், எம்எல்ஏக்களும் முன்னாள் அமைச்சர்களும் கடிதம் எழுதியிருந்தனராம்.. அதில், சிறைக்கு நேரில் கூட வந்து பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தையும், காரணத்தையும் சொல்லியதுடன், மற்ற அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் குறித்து புகாரும் தெரிவித்துள்ளனர்.

இந்த லெட்டர்களை எல்லாம் சசிகலா பத்திரமா வைத்திருக்கிறாராம்.. இந்த விஷயம் இப்போதுதான் லெட்டர் எழுதியவர்களுக்கே தெரிந்துள்ளது.. இப்போது அவர் ரிலீஸ் ஆகி வருகிறார் என்றதும் என்ன செய்ய போகிறாரா? விஷயம் கட்சிக்குள் தெரிந்துவிடுமே என்ற கலக்கத்தில் இருக்கிறார்களாம்..!

ஏற்கனவே சசிகலா சம்பந்தமாக எதுவும் பேசிவிடக்கூடாது என்று முதல்வர் வாய்மொழி உத்தாரவு போடப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த லெட்டர் மேட்டர் கசிந்து வருகிறது.. !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+