வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தாதீங்க.. இப்படித்தான் ஆகும்.. தமிழிசை சௌந்தரராஜன் சொன்ன காரணம்!
சென்னை: வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய கிழமைகளில் தேர்தல் நடத்தக் கூடாது என தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலுமே குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

தென் சென்னை தொகுதியில் இந்த முறை 54.27% வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்நிலையில், தென் சென்னை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு எண்ணும் மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைவது என்பது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லை, அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய ஒன்றுதான். தேர்தலில் மக்களை வாக்களிக்க வைப்பதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து தேர்தல் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் மீண்டும் மீண்டும் சரிபார்க்கவேண்டும். இல்லையென்றால் விளம்பரம் செய்தும் எந்த பயனும் இல்லை. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை களைந்தாலே 100 % வாக்குகளை பதிவு செய்யலாம்" என்றார்.
மேலும், சென்னையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது பற்றி பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால் மக்கள் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை என நினைத்து விட்டார்கள். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. புதன், வியாழன் கிழமைகளில் தேர்தல் நடத்தினால் வாக்கு சதவீதம் உயரலாம் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications