குஜராத்தை விட.. சென்னை மக்கள் தான் நன்கு படித்தவர்கள்.. அஸ்வினிடம் கூறிய ரவீந்திர ஜடேஜா
சென்னை: ‛‛குஜராத்தை விட சென்னை உள்பட தெற்கு பகுதி மக்கள் நன்கு படித்தவர்கள். கல்வியறிவு மிக்கவர்கள். இதனால் சென்னை அணிக்கு தேர்வானதுமே எப்படி மற்றவர்களுடன் பேசப்போகிறேன்'' என்ற பயம் இருந்ததாக சிஎஸ்கே அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வினிடம் கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வருகிறார். முதல் சில போட்டிகளை தவிர சிஎஸ்கே அணி எம்எஸ் தோனி தலைமையில் இந்த முறை களமிறங்கியது.

சென்னை அணிக்கு இந்த சீசன் சரியாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்தது. 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 பாயிண்ட்டுகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இந்நிலையில் தான் சென்னை அணிக்காக விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அஸ்வின் கேள்வி கேட்க ரவீந்திர ஜடேஜா அதற்கு பதிலளிக்கிறார். இதில் சென்னையை ஒப்பிடும்போது குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவு தான் என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரவீந்திர ஜடேஜா, ‛‛சென்னை அணிக்கு என்னை எடுத்தவுடன் நான் நினைத்த முதல் விஷயம் சென்னையில் அனைவரும் கல்வியறிவு பெற்றிருப்பார்களே என்பது தான். நான் அவர்களுடன் உரையாடுவதற்கு சிரமப்படுவேன் என்று நினைத்தேன்'' என்றார். இதையடுத்து குறுக்கிட்ட அஸ்வின், ‛‛இதனை யார் உங்களிடம் சொல்லியது?'' என்று கேட்கிறார்.
அதற்கு ஜடேஜா, ‛‛இயல்பாகவே தென்மாநிலங்கள் மற்றும் சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என்று எப்போதும் கேள்விப்பட்டு இருக்கிறோம். இது வெளிப்படையானது. தென்பகுதி மக்கள் கல்வியறிவு மிக்கவர்கள். இதனை ஒப்பிடும்போதும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போதும் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவு தான். இதனால் சென்னை வந்தபோது இங்கிருக்கும் அனைவரும் படித்திருப்பார்களே என்று நினைத்தேன்'' என்றார்.
அப்போது அஸ்வின், ‛‛முதலில் விரும்பவில்லை.. அப்படித்தானே?'' என்று கேள்வி கேட்டார். அதாவது சென்னையை விரும்பவில்லை என்ற தொனியில் அஸ்வினின் கேள்வி இருந்தது. அதற்கு ஜடேஜா, ‛‛இல்லை இல்லை.. நான் சென்னையில் ரொம்ப காலம் விளையாடி இருக்கிறேன். தங்கியிருக்கிறேன். சென்னை மக்களிடம் இருக்கும் பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
வெற்றியோ, தோல்வியோ, அவர்கள் எப்போதும் உங்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளமாட்டார்கள். சில மாநிலங்களில் அப்படியான சூழல் இல்லை. ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள். மேலும் சிஎஸ்கேவில் என்னுடைய முதல் பயம் என்பது எப்படி நான் மற்றவர்களுடன் பேசப்போகிறேன். ஆனால் இங்குள்ள மக்கள் பணிவானவர்கள். தாங்கள் தான் பெரியவர்கள் என்று காட்டிக்கொள்வது இல்லை'' என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications