முதலமைச்சரின் குட்புக்கில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஐபிஎஸ்! சுதந்திர தின விழாவில் சிறப்பு பதக்கம்!
சென்னை: போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுப்பதில் சிறப்பாக பணியாற்றியதற்காக தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஐபிஎஸ் க்கு சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அரசாணை எண் 411, உள்( மிக)த் துறை, நாள் 03.08.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க்கின் சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.
அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டுள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.












Click it and Unblock the Notifications