பயணிகளே! கவனம்! இன்று முதல் "மலைக்கோட்டை, பல்லவன், வைகை, மன்னை" எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!
சென்னை: மலைக்கோட்டை, பல்லவன், வைகை, மன்னை விரைவு ரயில்கள் இன்று முதல் நவம்பர் 3-ந் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போா்ட்) அதிவிரைவு ரயிலானது (12653) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மன்னாா்குடி மன்னை விரைவு ரயிலானது (16179) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 க்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது (16159) வரும் நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 க்குப் புறப்படும்.
காரைக்குடி - சென்னை எழும்பூா்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது ( 12605, 12606) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.
மதுரை - சென்னை எழும்பூா் - மதுரை வைகை அதிவிரைவு ரயில்களானது (12635, 12636) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.20 க்குப் புறப்படும்.












Click it and Unblock the Notifications