குளுகுளு வசதி.. சென்னை புறநகர் ரயில்களில் இணைக்கப்படும் ஏசி பெட்டிகள்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்திருப்பதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் குளுகுளு வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கலாம்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆண்டுதோறும் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் என்பது நிலவி வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு பயணிக்க வேண்டும் என்றால் அதிக நேரம் செலவாகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் வேகமாக பயணிக்கவும் சென்னையில் புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.
இதில் புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்களும், மெட்ரோ ரயில்களில் பல ஆயிரம் மக்களும் பயணம் செய்து வருகின்றனர். சென்னை புறநகர் ரயிலை பொறுத்தமட்டில் அது மின்சார ரயிலாக இயங்கி வருகிறது. சென்னை மட்டுமின்றி அண்டை மாவட்டமான செங்கல்பட்டையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது.
டிக்கெட் கட்டணம் குறைவு, அதோடு செல்ல வேண்டிய இடத்துக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சட்டென செல்லலாம் என்பதால் சென்னை புறநகர் ரயில் சேவை என்பது சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. இந்நிலையில் தான் சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
கோடை காலங்களில் பொதுவாக சென்னையில் வெப்பம் என்பது அதிகமாக இருக்கும். இதனால் புறநகர் ரயில்களில் பயணிக்கும் ரயில்கள் சிரமத்தை சந்தித்தனர். மேலும் ரயில்களில் ஏசி பெட்டிகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. தற்போது இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்றுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் பச்சை கொடி காட்டியுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில்களுக்கு தேவையான ஏசி பெட்டிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் தெற்கு ரயில்வேறுக்கு 12 ஏசி இஎம்யூ பெட்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஏசி பெட்டிகள் முதற்கட்டமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களில் இணைக்கப்பட உள்ளது. இதனால் சென்னை புறநகர் ரயிலை பயன்படுத்தும் மக்கள் இனி குளுகுளு வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications