தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இனி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் பயணங்களை மாற்றியமைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஏற்கனவே மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10 மற்றும் 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எழும்பூர் மற்றும் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய சில முக்கிய விரைவு ரயில்கள், தற்காலிகமாக மாற்று நிலையங்களிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்
* வண்டி எண் (12661 - பொதிகை எக்ஸ்பிரஸ்) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் இந்த ரயில் வரும் ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் செல்லாது. மேலும் இந்த ரயிலானது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08:05 மணிக்கு புறப்படும்.
* வண்டி எண் (16751 - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்): சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இரவு 09:05 மணிக்கு புறப்படும்.
* வண்டி எண் (12759 சார்மினார் எக்ஸ்பிரஸ்) தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்த ரயிலானது வரும் 6 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் இந்த ரயில் சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். பீச் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06:20 மணிக்கு இந்த ரயில் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்சார ரயில்கள் ரத்து
இதேபோன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10 மற்றும் 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடை பெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை டூ தாம்பரம்
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரயிலும் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரயில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரி - கடற்கரை
* கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
* இதேபோல் மறுமார்க்கத்தில் இரவு 9.20, 11 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் பகுதி நேரமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications