சம்மர் லீவுக்கு எண்ட்.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: கோடை விடுமுறை நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுநாள் பள்ளிகள் தொடங்குகின்றன. எனவே, வெளியூர் சென்னறவர்கள் மீண்டும் ஊர் திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனையடுத்து மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில்

பள்ளிகள் ஜூன் 6ம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 12ம் ஆக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி மீண்டும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பேருந்து பயன்பாடு அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை மற்றும் நெல்லை என 6 மண்டலங்களிருந்தும், இது தவிர, விரைவு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து என 8 மண்டலங்களில் 20,258 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜூன் 11ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைகிறது. எனவே மக்கள் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். இயல்பாகவே இந்த காலத்தில் பேருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும்.
எனவே இதனை சமாளிக்க போக்குவரத்து கழகம் வசம் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசல் குறைக்கப்படும். அதேபோல சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கெனவே பணி நிலையங்களில் இருந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த நெருக்கடியை நாங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எதிர்கொள்வோம்.

பெரும்பாலான பயணிகள் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது வழக்கமாக இயக்கப்படும் 20,258 பேருந்துகளை விட கூடுதலாக 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். ஜூன் 09ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
மாநிலத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 850 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இது தவிர மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்?












Click it and Unblock the Notifications