பூரித்த தூய்மை பணியாளர்கள்.. மேயர் பிரியா முகத்தில் ஒரே சிரிப்பு! சூப்பர் திட்டத்தை தொடங்கிய மா.சு
சென்னை: தூய்மை பணியாளர்களின் உடல் நலனை கருத்திகொண்டு 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை தொடங்கி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்து உள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் 60,587 நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இன்று கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மேயர் திருமதி பிரியா ராஜன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரபாகர் ராஜா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர், திரு.ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் டி. எஸ். செல்வ விநாயகம், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, நிலைக்குழுத் தலைவர் (கணக்கு) திரு. க. தனசேகரன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத்தலைவர் திரு. எம். கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்), 138வது மாமன்ற உறுப்பினர் திரு. கே. கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications