Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபார்முலா 4 கார் ரேஸ்.. FIA சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடத்தப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த நிலையில், FIA சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன.

formula 4 race formula 4 race chennai chennai 4

சென்னை தீவுத்திடலைச் சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்க கோரி பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

அதேசமயம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை, பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விசாரணைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பிற்பகலில் விசாரணை நடைபெற்றது.

சென்னையில் பெய்த மழை காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், FIA சான்றிதழ் பெற கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரியது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பு.

இதனை ஏற்று, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு இன்று இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இரவு 8 மணிக்குள் FIA சான்று பெறாவிட்டால் கார் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+