வந்துருச்சு கோடை விடுமுறை.. வெளுக்குது வெயில்.. ஃபாரீன் டூர் கிளம்பிய ஸ்டாலின் குடும்பத்தினர்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக பம்பரமாக சுழன்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் ஸ்பெயின் புறப்பட்டு சென்றுள்ளனர்.
மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி மற்றும் குழந்தைகள் என கோடைவிடுமுறையை ஒட்டி ஸ்பெயின் சென்றுள்ளார்கள்.
மு.க.ஸ்டாலினும் இவர்களுடன் செல்வதாக இருந்ததாம். ஆனால் தேர்தல் ஆணையம் 4 தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததால் தனது பயணத்தை அவர் ரத்து செய்து விட்டாராம்.

ஸ்டாலின் செல்லாததால் அவரது மனைவி துர்காவும் பிள்ளைகளுடன் டூர் செல்லவில்லை. என்னதான் அரசியலில் படுபிஸியாக இருந்தாலும் வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது பேரன், பேத்திகளோடு பாரின் டூர் அடிப்பார் ஸ்டாலின். இந்த முறை அது மிஸ்ஸிங்.
மே 23- ம் தேதி தேர்தல் முடிவு வர உள்ளதால் அதற்கு முன்னரே சென்னை திரும்புகிறார்களாம் ஸ்டாலின் குடும்பத்தினர். உதயநிதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வார் என 4 தொகுதி திமுக வேட்பாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஸ்பெயின் செல்கிறார்.
இதனிடையே மே 15- ம் தேதிக்கு முன்பே உதயநிதி சென்னை திரும்புவார் என்றும், கடைசி 3 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்வார் என்றும் கூறுகின்றனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications