துருக்கியிலிருந்து 2 வயது குழந்தையை சென்னைக்கு அழைத்து வர ஏர் ஆம்புலன்ஸ்! முதல்வர் ரூ.10 லட்சம் நிதி
சென்னை: உடல் நலக்குறைவால் துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வர உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவசரமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு "இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனை"-யில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவரது பெற்றொரின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்திருக்கிறது.
மேல் சிகிச்சைகு கையில் பணம் இல்லாத நிலையில் தனது மகளை தமிழ்நாடு அழைத்துச் செல்ல இஸ்தான்புல் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் சந்தியாவின் தந்தை மனோஜ்.குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து இஸ்தான்புல் நகரிலிருந்து மேற்காணும் மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் ஸ்டாலினிடம் பெற்ற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 லட்சம் அளித்து உத்திரவிட்டுள்ளார்.
தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications