மீண்டும் ஒரு ‘தீ பரவட்டும்’: 1950-களின் தார்மீகக் கோபத்தை கையில் எடுத்த ஸ்டாலின்? - ஒரு அலசல்!
சென்னை: 1950-களின் தொடக்கத்தில், வடக்கே இருந்து வந்த 'டால்மியா' பெயருக்கு எதிராகக் தண்டவாளத்தில் தலைவைத்து தி.மு.க.வினர் படுத்தபோது எழுந்த.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மொத்த வடநாட்டையும் எதிர்த்த போது.. எழுந்த அதே 'தீ பரவட்டும்' உணர்வு, இன்று மீண்டும் தமிழ்நாட்டின் வீதிகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம், வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல; இது திராவிட இயக்கத்தின் வேர்களை நோக்கிய ஒரு 'டைம் டிராவல்'.

அன்று இந்தி... இன்று தொகுதி... இலக்கு ஒன்றுதான்!
1953-ல் டால்மியாபுரம் போராட்டத்தின்போது கருணாநிதி காட்டிய அதே அதிரடியை, இன்று நாமக்கல்லில் மசோதா நகலை எரித்ததன் மூலம் ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார்.
அன்று: "வடக்கே வாழ்கிறது, தெற்கே தேய்கிறது" என்ற முழக்கம் மொழியை அடிப்படையாகக் கொண்டது.
இன்று: "தெற்கே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது குற்றமா?" என்ற கேள்வி அதிகாரப் பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டது.
இரண்டிற்கும் பொதுவான புள்ளி, 'டெல்லி மேலாதிக்கத்தை' எதிர்ப்பதுதான். அன்று அண்ணா கையாண்ட அதே "டெல்லிக்கு அடங்கமாட்டோம்" என்கிற தத்துவத்தை, இன்று "டெல்லி அடங்கும் வரை போராடுவோம்" என ஸ்டாலின் அப்டேட் செய்திருக்கிறார்.
தி.மு.க-வின் அரசியல்!
மசோதாவை எரிப்பது, கறுப்புக்கொடி ஏந்துவது என்பதெல்லாம் 1950-களில் தி.மு.க-வை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த 'அஜிட்ப்ராப்' (அரசியல் கிளர்ச்சி) உத்திகள்.
"அன்று அரசியலமைப்புச் சட்டத்தின் 343-வது பிரிவை (இந்தி திணிப்பு) எரித்தார்கள். இன்று மாநில உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எரிக்கிறார்கள்."
வழக்கமாகச் சட்டசபையில் தீர்மானம் போடுவது, கடிதம் எழுதுவது என 'சாஃப்ட்' பாலிடிக்ஸ் செய்யும் ஸ்டாலின், இந்த முறை களத்தில் இறங்கி மசோதாவை எரித்தது தொண்டர்களிடையே ஒரு வித 'எலக்ட்ரிக்' எனர்ஜியைப் பாய்ச்சியுள்ளது.
புள்ளிவிவரப் போர்: தென் மாநிலங்களுக்கு 'பெனால்டி'?
புதிய கணக்கீட்டின்படி, நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பங்கு 20%-லிருந்து 18%-ஆகக் குறையும். * உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 79% வளர்ச்சியை எட்டும்போது, தமிழ்நாடு வெறும் ஒரு படி மட்டுமே ஏற முடியும்.
"நன்றாகப் படித்த மாணவனுக்கு ரேங்க் கொடுக்காமல், தோல்வியடைந்த மாணவனுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதைப் போன்றது இது" என்பதே முதல்வரின் வாதம்.
எடப்பாடிக்கு வீசப்பட்ட அம்பு!
தனது எக்ஸ் (X) தளத்தில் ஸ்டாலின் வீசியுள்ள வார்த்தைகள் மிகக் கூர்மையானவை. "சேலத்தில் பிறந்துவிட்டு முதுகு வளைந்து இருக்க அவமானமாக இல்லையா?" எனக் கேட்டு எதிர்க்கட்சித் தலைவரை நேரடியாக 'வம்புக்கும்' இழுத்திருக்கிறார். 1950-களிலும் இதேபோல 'டெல்லிக்கு அடிபணிபவர்கள்' என காங்கிரஸை அண்ணா விமர்சிப்பார். அதே பாணியை இப்போது அதிமுக மீது ஸ்டாலின் பிரயோகித்துள்ளார்.
ஏப்ரல் 23 வாக்குப்பதிவை முன்னிறுத்தி, இந்தத் தொகுதி மறுவரையறை விவகாரத்தை ஒரு 'இருத்தலியல்' போராட்டமாக (Existential Crisis) மாற்றத் துடிக்கிறது தி.மு.க. 'தீ பரவட்டும்' என்பது அன்று பகுத்தறிவுக்காகவும் மொழி உரிமையுக்காகவும் ஒலித்தது. இன்று அதே தீ, தமிழகத்தின் அரசியல் அதிகாரம் கருகிவிடக் கூடாது என்பதற்காகப் பற்றவைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி இந்த நெருப்பை அணைக்குமா அல்லது தெற்கின் இந்த 'கருப்புப் புரட்சி' தேசிய அரசியலில் புயலை கிளப்புமா? பொறுத்திருந்து பார்ப்போம்!













Click it and Unblock the Notifications