தெற்காசியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கியவர் 'கலைஞர்'.. மார்தட்டி பெருமைப்பட்ட ஸ்டாலின்!
சென்னை: சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கியவர் கருணாநிதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சட்டமேதை அம்பேத்கர் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்ற வரலாற்று தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களின் விவரம் வருமாறு;

தெற்காசியா
1997-ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகம்தான், இந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

அம்பேத்கர் பெயரில்
இதனை அன்றைக்குத் தொடங்கிய முதலமைச்சர் கலைஞருடைய மகனான நான், முதலமைச்சராக இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
இது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான்.

மராட்டிய மாநிலம்
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா, அதாவது மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தது மட்டுமல்ல, வன்முறையில்கூட ஈடுபட்டார்கள். அம்பேத்கர் அவர்கள் பிறந்த மராட்டிய மாநிலத்திலே இந்த நிலைமை இருந்தது.

கோடிக்கணக்கில் தந்திகள்
தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கோடிக்கணக்கான தந்திகள் பறந்தன. அவருடைய கட்டளையை ஏற்று, அத்தனை பேரும் தந்தி அனுப்பி வைத்தார்கள். அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் அவர்களும், அப்பொழுது முதலமைச்சர் பொறுப்பில் இருந்த மதிப்பிற்குரிய சரத்பவார் அவர்களும் அந்தத் தந்திகளையெல்லாம் பார்த்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினார்கள். என்ன பதில் என்றால், நீங்கள் நினைப்பதைப்போல நிச்சயமாக அம்பேத்கர் பெயரை நாங்கள் சூட்டுவோம் என்று அறிவித்தார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications