Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைகள் இழந்தாலும் நம்பிக்கை இழக்காத மாணவன்.. ஆதரவாக வந்த ஸ்டாலின்.. உதவி செய்வதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மாவை முதலமைச்சர் ஸ்டாலின்
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாராட்டியதுடன், செயற்கை கைகள் பொருத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர் க்ரித்தி வர்மா இரண்டு கைகளை இழந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

 Stalin speak on phone with handicapped 10th student Krithi Varma

இந்நிலையில் அந்த மாணவரிடமும், அவரது தாயாரிடமும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அம்மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள சமூக வலைதளப்பதிவு விவரம் வருமாறு;

''பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்!

அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.'' இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+