Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பா? ரூ.1000 யாருக்கெல்லாம்? ‘கிளைமேக்ஸ்’.. ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் நிதிச் சூழலை கருத்திக் கொண்டு திட்டத்தில் பயன் பெற பொருளாதாரத் தகுதிகள் வரையறுக்கப்பட்டன. சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Stalin to conduct meeting with officials on magalir urimai thogai scheme

அதன்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நன்செய் நிலம், பத்து ஏக்கருக்கு அதிகமாக புன்செய் நிலம் இருக்கக் கூடாது, சொந்தமாக நான்கு சக்கர வாகனம் இருக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வகுக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் (வார்டு மெம்பர்கள் தவிர) ஆகியோருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

பயனாளிகள் எண்ணிக்கை 1 கோடிக்குள் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பொருளாதார அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனாலும், 1 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினும், ஒரு கோடியை விட அதிகமானாலும் பரவாயில்லை, தகுதியுள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாகவே தெரிகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், நிர்ணயிக்க நிபந்தனைகளுள் அடங்காத 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை பெறத் தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தமிழ்நாடு முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் இறுதிப்பட்டியல் விவரங்களை முன்வைத்தும், திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும், இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்தும் வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெறும் விழாவில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின். அன்றைய நாளே, இந்தத் திட்டத்தில் தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+