அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை.. விஜய் அதிர்ச்சி.. அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சென்னை கோட்டூர்புரத்தில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகர் (வயது 37) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சென்னை கோட்டூர்புரத்தில் தள்ளுவண்டியில் பிரியானி கடை நடத்தி வரும் ஞானசேகர் (வயது 37) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கைதான ஞானசேகர் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்கலைக்கழக மதில் சுவர் ஏறி குதித்து, அங்கு தனியாக இருக்கும் காதலர்களை ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டி, பணப்பறிப்பு மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் பாமகவின் ராமதாஸ், தமிழகத்தில் குற்றவாளிகளை தவிர யாருக்கும் பாதுகாபு இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜய் கூறியிருப்பதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல்,
பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம். இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications