சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா? - கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்பி
சென்னை: வந்தே பாரத் ரயிலுக்கு இந்தி தெரிந்த ஓட்டுநர்களை மட்டுமே நியமிக்கும் முடிவுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி கூறியிருப்பதாவது: சீனியர் லோகோ பைலட்களையே புதிய ரயில் துவங்கும் போது பணியமர்த்துவது வழக்கம். ஆனால் பிரதமர் பங்கேற்கும் சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு அந்த வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவு. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிப்பு. சென்னை இரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்க. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசன் எம்பியின் இந்த பதிவில் நெட்டிசன்கள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். Nma Kader Kadayanallur என்பவர், ஒட்டுமொத்த தமிழர்களும் அரசியலை கடந்து இதை எதிர்க்க வேண்டும் இல்லையென்றால் எல்லாவற்றிலும் இது போன்று இந்தி திணிக்கப்படும் என கூறியுள்ளார். Velmurugan K என்ற நெட்டிசன், ஏற்கனவே ஓடும் இரயில்கள் தாமதம் இல்லாமல் இயக்க நடவடிக்கை தேவை குறிப்பாக தென்மாவட்டம் செல்லும் இரயில்கள் மதுரைக்கு சரியான நேரத்திற்கு வந்து மிக தாதமாகவே அனுப்பப்படுகிறது. இது தினசரி வாடிக்கை அதை சரிசெய்ய நடவடிக்கை தேவை என குறிப்பிடுகிறார். Hussain Naaz என்ற நெட்டிசன், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications