சென்னையில் பலத்த காற்றுடன் மழை- தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த இடியுடன் கோடை மழை கொட்டியுள்ளது. சென்னையில் தற்போதும் கனமழை கொட்டி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது.

இதனால் 8 மாவட்டங்களில் இன்று முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் கோடைவெயில் வெளுத்து வாங்குகிறது.
இதனால் பகல் நேரங்களில் எந்த சாலைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது.
சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோடையின் உக்கிரம் சற்றே தணிந்த நிலை காணப்ப்டுகிறது.
சென்னையில் தொடரும் மழை
சென்னை நகரில் தற்போதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. வெப்பச் சலனம் மற்றும் திடீர் மேகமூட்டத்தால் சென்னையில் கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications