பள்ளி மாணவர்களுக்கு "போனஸ்" 5 மார்க் அறிவிப்பு.. யாருக்குன்னு பாருங்க.. தேர்வுத்துறையின் மாஸ் அதிரடி
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர்.

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் அதாவது ஏப்ரல் 24 முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகள் குழப்பமாக இருந்ததால், அக்கேள்விகளுக்கு மாணவர்களால் முறையாக பதிலளிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதேபோன்று, 28வது கேள்வியும் தவறாக கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனை அடுத்து, ஒரு மதிப்பெண் பிரிவில் 4, 5, 6 ஆகிய கேள்விகளுக்கும், இரு மதிப்பெண் பிரிவில் 28வது கேள்விக்கும் முழுமையாக மதிப்பெண் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வினாத்தாளை ஆய்வு செய்ததில், பிழை நேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 3 மதிப்பெண்ணும், 28வது கேள்விக்கு இரண்டு மதிப்பெண்ணும் என, 5 மதிப்பெண்கள் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடையை எழுதியிருந்தாலும், 5 மதிப்பெண்கள் முழுமையாக வழங்க வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. அதில், 'ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும். அதன்படி தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.மேலும் ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28-க்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும்" என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications