தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இனி "இது" தேவையில்லையாம்.. பொதுமக்கள் குஷி!
தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம்
சென்னை: தமிழக மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை, முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்..
மலிவு விலையில் கிடைக்கும் இந்த பொருட்களால்,. எத்தனையோ குடும்பங்கள் நன்மை அடைந்து வருகின்றன... வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருந்து வருகின்றன.

ரேஷன் கடை
மற்றொரு பக்கம் ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது.. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும்.. ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

பயோமெட்ரிக்
ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை, எனவே, அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது... கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன...

கைரேகை
கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என்று அதிகாரிகள் ஒருபக்கம் சொல்கிறார்கள்.. பலருக்கும் கைரேகை பதிவாவதில்லை அதிகாரிகளிடம் சொன்னாலும், அதை பற்றி காதில் வாங்கி கொள்வதில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் சொல்கிறார்கள்.. இப்படி நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பொருட்களை மட்டும் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து வருகிறது.

தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

தமிழக அரசு
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்












Click it and Unblock the Notifications