Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளம்பி வாங்க".. வேற கட்சின்னுகூட ஸ்டாலின் பார்க்கலியே.. திமுக அரசின் ஜிலுஜிலு அறிவிப்பு.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்தடுத்து மாஸ் அதிரடிகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம், இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.. இது மிகுந்த மகிழ்ச்சியை அனைத்து தரப்பினருக்கும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் இப்போது பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சி பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது... இந்த வகையில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பின் படி, நகை கடன் தள்ளுபடி, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என பல திட்டங்களை நிறைவேற்றிஉள்ளது..

Super facilities for mps mlas can travel free of cost in air conditioned buses with attendant

அதேபோல, தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் நடைமுறையில் உள்ளது.. ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது..

புகாரில் என்ன இருந்தது: அந்த புகாரில், அரசு பேருந்துகளில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே இலவசமாக பயணம் மேற்கொள்ள டிரைவரும், கண்டக்டரும் அனுமதிக்கின்றனர். ஆனால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று கூறப்பட்டது.. இதையடுத்து, இந்த புகார் குறித்து புதிய நெறிமுறைகளை தமிழக போக்குவரத்து துறை அப்போது வெளியிட்டிருந்தது..

அதன்படி, முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அவர் உதவியாளர் ஒருவருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உரிய இருக்கை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது..

சென்னை மாநகர: சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின், ஏசி பஸ்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு டிரைவர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மறுடிபயும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

குஷியோ குஷி: அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்... இந்த ஜில் அறிவிப்பானது, இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+