ஹைய்யா.. குடை ரெடியா மக்களே.. இன்றும் நாளையும் அடிச்சு ஊத்த போகுது மழை.. எங்கேன்னு பாருங்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பே, 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது... அதன்படி, கடந்த 2 தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது..

லேசான மழை

லேசான மழை

நேற்றைய தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியானது.. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.. இன்றைய தினம் அதாவது 3 ம் தேதியும் நாளை 4-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை

நாளை மறுநாள் 5-ம் தேதியும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருவாரூர்

திருவாரூர்

இதனிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூரில் விவசாயிகள் பருத்தியை அதிக அளவு சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்... மேலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதனால், பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி, சுரக்குடி, காக்கா கோட்டூர், பனங்குடி, ஆண்டிபந்தல் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 6 அளவில் திடீரென மழை பெய்தது. இதனால் பருத்தி விவசாயிகள் மிகவும் கவலைக்கு ஆளானார்கள்.

 தலைநகர்

தலைநகர்

இதனிடையே, கடந்த ஜுன் 30-ந் தேதி தென்மேற்கு பருவமழை டெல்லியில் தொடங்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்த நிலையில், மழை லேசாக பெய்ய தொடங்கிவிட்டது.. சில சமயம், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.. குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசிவருகிறது.. இனிமேல் டெல்லியில் வெப்பநிலை கணிசமாக குறையும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+