Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்வீட் நியூஸ்.. கல்விக்கடன் பெறணுமா? மாணவர்களுக்கு மத்திய அரசு சர்ப்ரைஸ்.. ஆன்லைனிலேயே சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்கள் கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதன் விவரம் என்ன?

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன... முக்கியமாக, பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

Super Opportunity by Central Government and online facility to get Education Loan

இருந்தாலும், கல்விக் கடன் பெற்றவர்கள் வேலை கிடைத்த பின்னரும் கடனைச் சரியாக திருப்பி செலுத்துவது இல்லை என வங்கிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கேட்டு வங்கி கிளைகளுக்கு செல்லும்போது அலைக்கழிக்கப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் கசிந்தன.

கல்விக்கடன்: அதனால்தான், கல்விக்கடன் பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிப்பதற்காக www.vidyalakshmi.co.in என்ற வெப்சைட் (விஎல்பி) கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 35 பொதுத்துறை, தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த வெப்சைட்டில் எளிமையாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நிலையையும் அறிந்துகொள்ளலாம். அதாவது, கட்டணம் செலுத்த முடியாத மாணவருக்கு இந்த கல்விக்கடன் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல தேவையில்லை.

வங்கிகள்: அனைத்து கல்வி கடன் நடவடிக்கைகளையும் கட்டாயமாக வித்யா லட்சுமி இணையதளம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து வங்கிகளும் தங்கள் கல்வி கடன் திட்டங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.

இந்நிலையில், கல்விக்கடன் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. மத்திய அரசின் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வீட்டு முகவரி, அருகிலுள்ள வங்கியின் பெயர், என்ன படிப்பு, எந்த கல்லுாரி, எத்தனை ஆண்டு, கல்விக்கட்டண விவரம், அலைபேசி எண், இ-மெயில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஆய்வுகள்:
இணையதள ஆய்வு குழு பரிசீலனைக்குப்பின் தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யும். இதன் அடிப்படையில் கல்விக்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், கல்லூரிகளில் படிப்பதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் நேரடியாக விண்ணப்பம் கொடுத்து கல்லூரியிலிருந்து வழங்கும் சான்றுகளையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகு கல்விக் கடன் வழங்கினார்கள். ஆனால் பல வருடங்களாக கல்விக்கடன் கொடுப்பது குறைந்து வருகிறது.

முக்கியத்துவம்:
அதனால்தான், கல்விக் கடன் பெற விரும்புவோர் மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "வித்யாலெட்சுமி" என்ற இணையத்தில் தேவையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.. இந்த விண்ணப்பத்தை ஆய்வுக்குழு ஆய்விற்கு பிறகு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் பெறலாம் என்பதால், இதற்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.. சம்மந்தப்பட்ட வங்கியின் நிதியின் அளவைப் பொறுத்து கல்விக்கடன் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+