உலக யோகா தினம்: சேரா யோகா நடத்தும் யோகத்தான் போட்டி - சூரிய நமஸ்காரம் செய்யலாம்
சென்னை: உலக யோகா தினம் இம்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.அதையொட்டி வரும்16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில்.யோகத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.
சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம். நாம் தினசரி தொடர்ந்து சூரிய நமஸ்காரங்கள் செய்து வந்தால் நோய் நொடிகள் நீங்கி நமது மனமும் உடலும் சூரியனைப் போல பிரகாசிக்கும். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
உலக யோகா தினம் இம்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி வரும்16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில்.யோகத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.

யார் பங்கேற்கலாம்
இதில் 8வயது முதல் 50 வயது மேற்பட்ட சூரிய நமஸ்காரம் செய்ய பயிற்சி உடையவர்கள் வரை பங்கேற்கலாம். இதில் 12படி நிலைகளை சுற்றாக கொண்ட சூரிய நமஸ்காரத்தை 30.50 மற்றும்108 சுற்றுக்கள் என மூன்று பிரிவுகளில் செய்யும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கான பெயர் பதிவு வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும்.
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
உடல் உறுப்புகளின் செயல்களை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது
எனவே உணவில் உள்ள சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டுகிறது.
உடல் நலம் பெறுவதோடு மனநலமும் பெற்று மன சம்பந்தப்பட்ட மன அழுத்தம். மன உளைச்சல் இன்றி மன அமைதி பெற உதவும்
மேலும் சர்க்கரை நோய். இரத்த அழுத்தம்.இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து தீர்வு அளிக்கிறது.

பதிவு செய்யலாம்
உடல் நலம் மன நலம் தரும் யோகாவை அனைவரும் கற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்புவோர் 7010054452,8939131805,
ஆகிய கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம்
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications