இந்தியா- பாக். கிரிக்கெட் மேட்ச் உற்சாகம்.. 1 நிமிடத்திற்கு 250 பிரியாணி ஆர்டர்.. ஸ்விக்கி தகவல்
சென்னை: இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின் போது 1 நிமிடத்திற்கு 250 பிரியாணிகளை இந்தியா ஆர்டர் செய்துள்ளதாக உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நேற்று முன் தினம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு நாள் சர்வதேச உலகக் கோப்பை போட்டி நடந்தது.

இந்த போட்டியின் போது மிகுந்த உற்சாகத்தில் இரு நாட்டு ரசிகர்களும் இருந்தனர். இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இந்த நிலையில் மக்கள் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தவாறே தங்களுக்கு உணவையும் ஆர்டர் செய்தனர்.
அந்த வகையில் எவ்வளவு பிரியாணி ஆர்டர் செய்தார்கள் என்பதை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்விக்கியில் ஒரு நிமிடத்திற்கு 250 பிரியாணிகளை ஆர்டர் செய்தனராம். போட்டி தொடங்கியதிலிருந்தே பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாம். இதில் சண்டீகரில் உள்ள ஒரு வீட்டில் 5 அல்லது 10 பிரியாணி ஆர்டர் செய்வார்கள் என பார்த்தால் ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ததாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குளிர்பானங்களை ஆர்டர் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் சிப்ஸ் பாக்கெட்டுகள் நீல ரேப்பர் 10,916 பாக்கெட்டுகளும் பச்சை ரேப்பர் 8,504 பாக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன. அதே நேரத்தில் 3,509 ஆணுறைகளும் விற்பனையாகின. ஒருவர் 86 வடபாவ்களை ஆர்டர் செய்தாராம். அது உடனடியாக டெலிவரியாகிவிட்டதாம்.
ஸ்விக்கி நிறுவனம் அளித்த சண்டீகர் குடும்பத்தினரின் 70 பிரியாணிகளை ஒரு ஆளை வைத்தா டெலிவரி செய்தார்கள் என இணையத்தில் விவாதம் தொடங்கியுள்ளதாம். ஆனால் பலர் ஒரு ஆளை வைத்து எப்படி ஒரே நேரத்தில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

பாகிஸ்தானை இந்தியா வென்றதால் அன்று இரவு முழுவதும் இந்தியாவிலும் இந்தியர்கள் வசிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாட்டம் நிகழ்ந்தது. அது போல் இந்தியா வென்றதற்கு மதுபானங்களை பீய்ச்சி அடித்தும் பல ரசிகர்கள் கொண்டாடினர். எனவே மதுபானங்களின் விற்பனையும் களைகட்டியிருக்கும் என்றே தெரிகிறது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications