‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கி.வீரமணி.. ரூ. 10 லட்சத்தை என்ன செய்யப் போகிறார் தெரியுமா? அடடே!
சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், 'தகைசால் தமிழர்' விருது அளித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அந்த 10 லட்சத்தை கி.வீரமணி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தேசியக் கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் செயல்படுபவர்களுக்கான 'தகைசால் தமிழா்' விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தகைசால் தமிழர் விருது, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2021-ஆம் ஆண்டில் இருந்து அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது. மூன்றாவது ஆண்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தகைசால் தமிழர் விருதைப் பெற்ற கி.வீரமணி, "இது தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்ட விருது. எனக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை, திருச்சியில் அமையவுள்ள சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கவுள்ளேன்." என அறிவித்துள்ளார்.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட பன்னோக்கு திறன் வளர் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பெரியார் உலகம் மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில், ரூ.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆண்டில் பணிகளை முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலையும், 60 அடியில் பீடமும் என 155 அடியில் சிலை நிறுவப்பட உள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications