ஆளுநர் உயிருக்கு ஆபத்து.. திமுக அரசு மீது ஆக்சன் எடுங்க! டெல்லி வரை போன அதிமுக.. பிரதமரிடம் பரபர மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று முதல்நாள் சிதம்பரத்தில் தருமபுரம் ஆதீனத்தில் ஞானரதத்தை துவக்கி வைக்க சென்ற போது அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டப்பட்டது.

ஆளுநரின் இந்த பயணத்தை திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தது. அதோடு அவருக்கு எதிராக மயிலாடுதுறையில் திமுக கூட்டணி கட்சிகளும், திவிக, திகவும் கடுமையாக போராட்டம் செய்தன.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில்தான் ஆளுநர் கான்வாய் மீது கல் வீச்சு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. அதே சமயம் ஆளுநர் கான்வாயில் கடைசியில் வந்த மூன்று வாகனங்கள் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் தமிழ்நாடு போலீஸ் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. போலீசார் அங்கு இருந்ததால் கல் வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டது என்று போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரத்தை பாஜக கடுமையாக எதிர்த்துள்ளது.

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது பற்றி கூறுகையில், ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். ஆளுநர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். ஆளுநரிடம் ஸ்டாலின் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத போகிறேன் என்று குறிப்பிட்டார். இதை அதிமுகவும் கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்து இருந்தது.

அதிமுக விமர்சனம்

அதிமுக விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி நேற்று சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளது.

 கடிதம்

கடிதம்

அதிமுக சட்டக்குழு உறுப்பினர் பாபு முருகவேல் சார்பாக இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது. மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த புகார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 4 பக்கங்களுக்கு இந்த புகார் எழுதப்பட்டு உள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.

மனுவில் என்ன உள்ளது?

மனுவில் என்ன உள்ளது?


அதோடு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போலீசார் சுதந்திரமாக செயல்படவில்லை. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் திமுக திறம்பட செயல்படவில்லை. தமிழ்நாட்டின் பாதுகாப்பை திமுக உறுதி செய்யவில்லை.

Recommended Video

    ஆளுநர் பாதுகாப்பு விவகாரம்.. முதல்வர் ஸ்டாலின் தரும் விளக்கம் ஏற்புடையதல்ல.. பாஜக அண்ணாமலை - வீடியோ
    நடவடிக்கை வேண்டும்

    நடவடிக்கை வேண்டும்

    இதனால் அரசியலமைப்பு சாசன விதிப்படி தமிழ்நாடு அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநர் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு உதாரணம். இதில் உடனடியாக திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசன விதிப்படி திமுக மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+