அப்படிப் போடு.. சீமானுக்கு கிடைத்த 'பூஸ்ட்'.. தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
Recommended Video
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி இருப்பது தான்.

பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதில் நாம் தமிழர் கட்சிக்கு பெருமை கிடைத்தாலும், வெற்றி எனும் அளவில் பார்க்கும் போது, இந்த முயற்சி சாத்தியமா? என்பதே கேள்வி. வெற்றிப் பெறும் வேட்பாளர்களுக்கே கட்சிகள் சீட் கொடுக்க முன்வரும். ஆனால், நாம் தமிழர் வேறு வியூகத்தை வாக்காளர்களை நம்பி கையில் எடுத்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களம் காண்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று முன்பு அறிவித்த சீமான், பின் திருவொற்றியூரை தேர்வு செய்தார்.

எனினும், இவை அனைத்தையும் மறந்து சீமான் உட்பட வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது நாதக. வெற்றி என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி இருந்தாலும், சீமானின் நோக்கம் வாக்கு சதவிகிதம் தான். மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளை விட அதிக வாக்கு சதவிகிதம் பெற்றாலே, அது சீமானை பொறுத்தவரை மாபெரும் வெற்றி தான்.

இந்நிலையில் தான் தமிழ்த் தேசிய கிறித்தவர் இயக்கம் நாம் தமிழர் கட்சிக்கு இன்று தனது ஆதரவளித்தது. இதுகுறித்து அந்த இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கிறித்தவர் இயக்கம் மற்றும் ஷாகின் பாக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள், நாம் தமிழர் கட்சிக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றன. தமிழர் உரிமையை மீட்கவும், வளங்களை காக்கவும், தமிழகம் மதவாதிகளின் பிடியில் சிக்காமல் தடுக்கவும் சமரசமின்றி போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்கு துணை நின்று வலிமை சேர்ப்போம்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications