நடிகை சித்ரா காலமானார்.. விடிகாலையில் மாரடைப்பால் பிரிந்த உயிர்.. ரசிகர்கள் அதிர்ச்சி !
நடிகை நல்லெண்ணைய் சித்ரா காலமானார்
சென்னை: பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்... இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
80"களில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா.. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார்.. டைரக்டர் கே. பாலச்சந்தரால், ருத்ரய்யா இயக்கிய, 'அவள் அப்படித்தான்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

ரஜினிகாந்த் நடித்த ர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சித்ரா. டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாகவும் நடித்திருந்தார். இது அவரது நடிப்பை பேசும்படி செய்தது.
எனினும் ஒரு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர் என்பதால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார்.. நிறைய மலையாள படங்களிலும் சித்ரா நடித்துள்ளார்.. ஆனால், சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்துள்ளார்.
கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார்.
இந்த நிலையில் நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் இன்று விடிகாலை காலமானார்... இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. .. பலரும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications