Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ல் நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருவாரத்திற்கு முன்னதாகவே நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். 14ஆம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

Tamil Nadu Assembly Budget Session end to Sept 13,2021 says assembly speaker Appavu

இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கார சார விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபையில் அறிவித்தார்.

சட்டசபை முன்கூட்டியே நிறைவடைவதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல்வேறு துறைகள் மீதான விவாத நாட்கள் இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும்.

பிரியாணி பரிசுப்பொருட்கள் வேண்டாம்

சட்டசபை கூட்டத்தொடரில் சிக்கன நடவடிக்கையாக முதல்முறையாக எம்எல்ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தது.
உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படுவது வழக்கம்.

எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், காவல் துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்தந்த அரசுத்துறையிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு செலவு செய்வதற்கு அரசுத்துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது.

இந்நிலையில், முதல்முறையாக சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக, இந்த நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தந்த துறைத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+