தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ல் நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி வரைக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒருவாரத்திற்கு முன்னதாகவே நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். 14ஆம் தேதி வேளாண் நிதிநிலைஅறிக்கையை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த இரு பட்ஜெட்டுகளும் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கார சார விவாதங்கள் சட்டசபையில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டசபை கூட்டத்தொடர் ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தொடர் முன்கூட்டியே செப்டம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என, சபாநாயகர் மு.அப்பாவு சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபை முன்கூட்டியே நிறைவடைவதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பல்வேறு துறைகள் மீதான விவாத நாட்கள் இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும்.
பிரியாணி பரிசுப்பொருட்கள் வேண்டாம்
சட்டசபை கூட்டத்தொடரில் சிக்கன நடவடிக்கையாக முதல்முறையாக எம்எல்ஏக்களுக்கு பிரியாணி, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கும் நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது அந்தந்த துறைகளிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்குவது போன்றவை நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தது.
உயர் ரக சூட்கேஸ்கள், கடிகாரங்கள், ஆவின் பொருட்கள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்படுவது வழக்கம்.
எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக அதிகாரிகள், காவல் துறையினர் என ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்குவதற்காக அந்தந்த அரசுத்துறையிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு செலவு செய்வதற்கு அரசுத்துறைகளின் பட்ஜெட்டில் எந்த அனுமதியும் கிடையாது.
இந்நிலையில், முதல்முறையாக சிக்கனத்தை கடைப்பிடிக்கும் விதமாக, இந்த நடைமுறையை கைவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தந்த துறைத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications