TamilNadu Assembly Live:ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு- அரசியல் சாசனத்துக்கு விரோதமானது- துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடிய தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமது உரையை வாசிக்காமலேயே வெளியேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக ஆளுநருக்கு முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

tamilnadu assembly 2025  tamilnadu                                        2025

Jan 06, 2025, 10:45 am IST

தேசிய கீதத்துடன் சட்டசபை முதல் நாள் நிகழ்வு நிறைவு

தேசிய கீதம் இசைக்கப்பட்டு சட்டசபை முதல் நாள் கூட்டம் நிறைவடைந்தது.
Jan 06, 2025, 10:41 am IST

அரசியல் சாசனத்துக்கு எதிரான ஆளுநர்

அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்- அமைச்சர் துரைமுருகன்
Jan 06, 2025, 10:41 am IST

தமிழ்த் தாய் வாழ்த்து மரபு

ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும் உரையின் நிறைவில்தான் தேசிய கீதம் பாடுவதும் மரபு என கடந்த ஆண்டே எடுத்துச் சொல்லியும் மீண்டும் உரையை படிக்காமல் சென்றுவிட்டார் ஆளுநர்- துரைமுருகன்
Jan 06, 2025, 10:40 am IST

ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டு

ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டசபை மரபுகளை மீறி செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Jan 06, 2025, 10:38 am IST

2 ஆண்டுகளாக ஆளுநர் செய்தது என்ன?

2023, 2024-ம் ஆண்டுகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் உரையாற்றிய போது மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரிக்கிறார் அமைச்சர் துரைமுருகன்
Jan 06, 2025, 10:36 am IST

ஆளுநர் வெளிநடப்பு- துரைமுருகன்

சட்டசபையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது தொடர்பாக சட்டசபையில் சபை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
Jan 06, 2025, 10:31 am IST

வெளியேறியது ஏன்? ஆளுநர் மாளிகை தமிழில் விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் அவர்கள் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
Jan 06, 2025, 10:19 am IST

ரூ10 லட்சம் கோடி முதலீடு

தமிழ்நாடு இதுவரை ரூ10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது- சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை
Jan 06, 2025, 10:17 am IST

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும்- சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை
Jan 06, 2025, 10:13 am IST

மீனவர் பிரச்சனை

தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்- சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை
Jan 06, 2025, 10:12 am IST

ரூ4,000 கோடியில் கிராம சாலைகள் மேம்பாடு

ரூ4,000 கோடியில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்- சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை
Jan 06, 2025, 10:11 am IST

தாயுமானவர் திட்டம் தொடக்கம்

வறுமையை ஒழிப்பதற்காக தாயுமானவர் திட்டம் தொடக்கப்படும்- சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை
Jan 06, 2025, 10:10 am IST

மோடி, அமித்ஷாவுக்கு டேக் செய்த ஆளுநர்

தமிழ்நாடு சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது தொடர்பான எக்ஸ் பதிவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு டேக் செய்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
Jan 06, 2025, 10:05 am IST

ஆளுர் மாளிகை மீண்டும் விளக்கம்

சட்டசபையில் தமிழ்த் தாய் முதலில் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் வெளியேறியதாக மீண்டும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
Jan 06, 2025, 10:03 am IST

தமிழக அரசின் திட்டங்கள்

சபாநாயகர் அப்பாவு வாசிக்கும் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன
Jan 06, 2025, 9:59 am IST

ஆளுநர் உரையை வாசிக்கிறார் சபாநாயகர் அப்பாவு

சட்டசபையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்
Jan 06, 2025, 9:58 am IST

தேசிய கீதம் முதலில் இசைக்க வேண்டும்- ஆளுநர்

சட்டசபையில் ஆளுநர் உரை வாசிக்கும் முன்னர் முதலில் தேசிய கீதம்தான் இசைக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆளுநரின் நிலைப்பாடு; தமிழ்நாடு சட்டசபையில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படும்; ஆளுநர் உரை நிறைவு செய்த பின்னர் இறுதியாகவே தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது மரபு. இதனை மாற்ற வேண்டும் என்பது ஆளுநரின் நிலைப்பாடு
Jan 06, 2025, 9:56 am IST

ஆளுநர் உரையை வாசிக்காததால் என்ன நடக்கும்?

ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றாலும் அவரது உரையை வாசித்ததாக சபையில் பதிவு செய்யப்பட்டு ஏற்கப்படும்.
Jan 06, 2025, 9:51 am IST

ஆளுநர் வெளியேறியது ஏன்? என விளக்கம்

சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் தந்துள்ளது
Jan 06, 2025, 9:49 am IST

3-வது முறையாக ஆளுநரால் சர்ச்சை

தமிழ்நாடு சட்டசபையில் 2023, 2024-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையில் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது 3-வதாக சட்டசபைக்கு வந்த நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறினார்.
Jan 06, 2025, 9:44 am IST

யார் SIR அதிமுக பேட்ஜ்

அதிமுகவினர் சட்டசபைக்கு அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தை முன்வைத்து யார் SIR என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
Jan 06, 2025, 9:40 am IST

ஆளுநருக்கு கண்டனம்

தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாதவராக ஆளுநர் ரவி இருக்கிறார்- காங்கிரஸ் செல்வப்பெருந்தகை
Jan 06, 2025, 9:39 am IST

கூண்டோடு வெளியேற்ற உத்தரவு

சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
Jan 06, 2025, 9:39 am IST

அதிமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவு

சட்டசபைக்கு குந்தகம் விளைவிக்கும் அதிமுகவினரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
Jan 06, 2025, 9:38 am IST

உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையை வாசிக்காமலேயே புறப்பட்டார்
Jan 06, 2025, 9:35 am IST

சட்டசபைக்குள் அதிமுக முழக்கம்

சட்டசபைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிடுகின்றனர்
Jan 06, 2025, 9:32 am IST

அலுவல் ஆய்வுக் குழு கூட்டம்

சட்டசபையில் ஆளுநர் உரைக்குப் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யும்
Jan 06, 2025, 9:30 am IST

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாக வாசிப்பாரா?

2023, 2024-ம் ஆண்டு சட்டசபை கூட்டத் தொடர்களில் ஆளுநர் ரவியின் உரை வாசிப்பில் சர்ச்சை எழுந்தது; ஆளுநர் வெளிநடப்பு செய்திருந்தார்; இந்த ஆண்டு ஆளுநர் தமது உரையை முழுமையாக வாசிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது
Jan 06, 2025, 9:28 am IST

ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டம்

நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டசபை தொடங்குகிறது
Jan 06, 2025, 9:28 am IST

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அணிவகுப்பு மரியாதை

தமிழக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+