தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை செயலாளராக மிக நீண்டகாலமாக பணியாற்றி வந்த சீனிவாசன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபை செயலாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டசபை செயலாளராக சீனிவாசனின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை உள்ள நிலையில் முன்கூட்டியே அவர் ராஜினாமா செய்துள்ளது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

tamil-nadu-assembly-secretary-srinivasan-resigns-and-shanthi-takes-over

தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக விஜய் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இது கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தவெக, காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனிடம் வழங்கி உள்ளார். சீனிவாசனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை உள்ளது. பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் முன்கூட்டியே சீனிவாசன் தமிழக சட்டசபை செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த 2018 ம் ஆண்டில் தமிழக சட்டசபை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது அதிமுகவின் ஆட்சி நடந்தது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வந்தார். அவர் தான் சீனிவாசனுக்கு சட்டசபை செயலாளர் பதவியை வழங்கினார். தமிழக சட்டசபை பணியில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் சீனிவாசனை அங்கீகரிக்கும் கையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

அதன்பிறகு 2021ம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிமுகவை வீழ்த்தி திமுக வென்றது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி சீனிவாசனை நியமனம் செய்தபோது முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சீனிவாசன் மாற்றம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

அதுமட்டுமின்றி கடந்த 2023ம் ஆண்டில் சீனிவாசனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவர் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அப்போதும் முதல்வராக இருந்த ஸ்டாலின் அவரது பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் வரை நீட்டிப்பு செய்தார். அவர் 2026 செப்டம்பர் 30ம் தேதி வரை அந்த பொறுப்பில் இருப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் விஜய் முதல்வரான நிலையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு 4 மாதங்கள் உள்ள நிலையில் சீனிவாசன் தனது பொறுப்பை இன்று ராஜினாமா செய்தார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டசபை செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதிய சட்டசபை செயலாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+