"உங்களுக்கு என்ன பிரச்சினை.." எடப்பாடி கேட்ட கேள்வி.. அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளி
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். 2வது நாளான நேற்று முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் 3வது நாளாக இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. அப்போது கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏல்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை இது குறித்து விவாதிக்கலாம் என பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பு சட்டசபை கூட்டத்தொடர் இப்போது கூடியுள்ளது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் (ஜனவரி 20) கூடியது.. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் ஒலிக்கப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.. அத்தோடு ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இருந்ததாகவும் ஆளுநர் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆளுநரை உரையை அவர் வாசித்ததாகக் கருதப்படும் எனச் சொல்லி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆளுநர் ரவியின் உரையின் தமிழகத்தைச் சட்டசபை தலைவர் அப்பாவு வாசித்தார். அப்போது அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையில் இருந்தும் வெளியேறினர். தொடர்ந்து நடந்த சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் அவையை 24ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 2வது நாளாக நேற்று சட்டசபை கூடியது. காலை 9.30 மணிக்கு அவை கூடிய நிலையில், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.. பிரபல தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல், எம்.எல்.ஏ. பொன்னுசாமி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்று 3வது நாளாக அவை கூடியது.. காலை உறுப்பினர்கள் கேள்விக்குத் துறை ரீதியான அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும் இன்று தொடங்குகிறது.
இதற்கிடையே சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கறிக்கோழி பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டுள்ளனர். நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்கச் சில நிமிடங்கள் அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்சினை என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒரு கட்சி மட்டும் அளித்திருந்தால் அனுமதி அளித்திருப்பேன்.. மொத்தம் 15 பேர் கொடுத்துள்ளனர்... அனைவருக்கும் அனுமதி தர வேண்டியுள்ளது என்றார். இருப்பினும், சபாநாயகர் பதிலை ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாராகி வருவதாக குறிப்பிட்டார். மேலும், பதில் தயாரானதும் நாளை அது குறித்து விவாதிக்கலாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இருப்பினும், இதை ஏற்க மறுத்த அதிமுக எமஎல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?











Click it and Unblock the Notifications