"பல்வேறு விளையாட்டுக்களுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில்.." அமைச்சர் பிடிஆரின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்து வரும் நிலையில், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது.

வெளிநடப்பு
இன்று காலை நிதியமைச்சர் பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய போது, ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஒலிம்பிக் திட்டம்
விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் குறித்து அமைச்சர் பிடிஆர், "ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கக் குழு போலவே தமிழ்நாட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கத் தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்தைச் செயல்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வடசென்னை
பல்வேறு விளையாட்டுக்களுக்குப் புகழ்பெற்ற வட சென்னையில் இளைஞர்கள் திறனை ஊக்குவிக்கவும் நோக்கத்துடன் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். கைப்பந்து, பூ பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி மற்றும் நவீன உடற்பயிற்சி கூடத்தில் சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் முதற்கட்டமாக ரூபாய் 10 கோடி செலவில் வளாகம் அமைக்கப்படும்.

ஒலிம்பியாட் 2022
உலக அளவில் செஸ் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்ற போட்டி செஸ் ஒலிம்பியாட். பொதுவாக இந்தப் போட்டியை நடத்துவதற்குச் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் போட்டி நடக்கும். இதுவரை இந்திய போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பலனாக முதல் முறையாக ஒலிம்பியாட் 2022 சென்னையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

திருப்பமுனை
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இந்த போட்டிகளைச் சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த அரசு வழங்கும். இந்த மதிப்பீடுகளில் விண்வெளியில் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 293 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications