விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட். ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! சிஎம் விஜய் அதிரடி!
சென்னை: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தள்ளுபடி வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து வந்த கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்தது. இதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் அதன் முழுத் தொகையையும் மாநில அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இதனையும், தமிழக அரசின் தற்போதைய நிதிநிலையையும் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.
புதிய அறிவிப்பின்படி, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது, 100 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
அதேநேரத்தில் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை நிவாரணம் கிடைக்கும்.
அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகள் பயனடைய உள்ளனர்.
இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் 5 லட்சத்து 16 ஆயிரத்து 183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடி தள்ளுபடி கிடைக்க உள்ளது.
மேலும் 93 ஆயிரத்து 548 இதர பெரு விவசாயிகளுக்கும் ரூ.337.15 கோடி அளவிலான கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மொத்தமாக ரூ.5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் அடுத்த சாகுபடி பருவத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மீண்டும் கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய கடன்களை பெற்று சாகுபடியில் ஈடுபட இந்த திட்டம் உதவும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை மாறுபாடு, உற்பத்திச் செலவு உயர்வு, உரம் மற்றும் தொழிலாளர் செலவின அதிகரிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், மாநிலத்தின் மிகப்பெரிய விவசாய நலத் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
ஆன்லைன் லிஸ்ட்டில் கரும்பு அவுட்.. சிவகங்கை கூட்டுறவு வங்கி பயிர்க்கடனில் விவசாயிகள் ஷாக்! என்னாச்சு -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்!













Click it and Unblock the Notifications