தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா தொற்று... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது!
சென்னை: தமிழகத்தில் சென்னையில் இன்று மட்டும் 1369 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் 473 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 1096 பேரும், கோவையில் 369 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்னும் 13,110 பேரும், கோவையில் 4,941 பேரும், செங்கல்பட்டில் 2,657 பேரும், கடலூரில் 1,232 பேரும், ஈரோட்டில் ,1057 பேரும், சேலத்தில் 2,409 பேரும், தஞ்சாவூரில் 1,268 பேரும், திருவள்ளூரில் ,1732 பேரும், திருப்பூரில் 1,146 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 91 பேரும், அடுத்தது ராமநாதபுரத்தில் 169 பேரும், அரியலூரில் 208 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகபட்சமாக சென்னையில் 18 பேரும், சேலத்தில் 6 பேரும், கோவையில் 5 பேரும், நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 4 பேரும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்கு கொரோனா தொற்று...67 பேர் உயிரிழப்பு!!
அதிகபட்சமாக இதுவரை தமிழகத்திலேயே சென்னையில் 3,336 பேரும், செங்கல்பட்டில் 579 பேரும், கோவையில் 476 பேரும், காஞ்சிபுரத்தில் 340 பேரும், மதுரையில் 393 பேரும், திருவள்ளூரில் 570 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 1369 பேருக்கும், கோவையில் 473 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 322 பேருக்கும், தஞ்சாவூரில் 242 பேருக்கும், திருவள்ளூரில் 252 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.