10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வில் விலக்கு என அறிவிப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையின் இயக்குனர் சேதுராம வர்மா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‛‛10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அவரவர் தாய்மொழியில் மொழிப்பாட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் மொழி தேர்வில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு வழங்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
"ரூ.5 கோடி ஜீவனாம்சம், 3BHK சொகுசு வீடு!" 10 ஆண்டு நீடித்த விவாகரத்து போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
ரத்தாகிறதா தமிழக சட்டசபை தேர்தல்? உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்தவர் மனுத்தாக்கல்.. பின்னணி -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
மனைவி மீது 80 வழக்குகள்.. வக்கீல் கணவரின் மாஸ்டர் பிளான்.. சுப்ரீம் கோர்ட் மரண அடி! ரூ.5 கோடி எதற்கு -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications