10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழி தேர்வில் விலக்கு என அறிவிப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் தமிழ் மொழி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் தான் சிறுபான்மை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும். மாறாக அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் தமிழை கட்டாய பாடமாக்குவதில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்து இருந்தது. அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையின் இயக்குனர் சேதுராம வர்மா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‛‛10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அவரவர் தாய்மொழியில் மொழிப்பாட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் மொழி தேர்வில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு வழங்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
தேர்வுத்துறையின் இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவர்கள் வரை தமிழ் மொழி பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள்












Click it and Unblock the Notifications